ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி – July 7, 2019

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம் மற்றும் மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து அரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட மைய நூலகத்தில் 07.07.2019 அன்று மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் “உடலே மருத்துவர்” எனும் தலைப்பில் மருத்துவர் அக்குஹீலா எஸ்.வி.தனலட்சுமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு

மாவட்ட மைய நூலகம் மற்றும் ஸ்மார்ட் லீடர்ஸ் ஐ.ஏ.எஸ் (Smart Leaders IAS) நிறுவனம் இணைந்து சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தமிழ்நாடு இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு மாவட்ட மைய நூலகத்தில் 07.07.2019 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெற்றது.

TNPSC Group – IV தேர்விற்கான பயிற்சி வகுப்பு, July 7, 2019

போட்டித்தேர்வு மாணவர்களுக்காக TNPSC Group – IV தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வு நடைபெற்றது இப்பயிற்சி வகுப்பினை பயிற்றுநர் திரு.சுரேஷ் பயிற்சி வழங்கினார்.

TNPSC Group – IV தேர்விற்கான மாதிரி தேர்வு , July 7, 2019

போட்டித்தேர்வு மாணவர்களுக்காக TNPSC Group – IV தேர்விற்கான மாதிரி தேர்வு நடைபெற்றது இப்பயிற்சி வகுப்பினை மைய நூலக முதல் நிலை நூலகர் திருமதி.கண்ணம்மாள் வினாத்தாள்கள் வழங்கி துவக்கி வைத்தார்.

TNPSC Group – IV தேர்விற்கான பயிற்சி வகுப்பு July 4, 2019

போட்டித்தேர்வு மாணவர்களுக்காக TNPSC Group – IV தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பினை பயிற்றுநர் திரு.சுரேஷ் பயிற்சி வழங்கினார்.

Tnpsc Group – 4 வாசிப்பாளர்கள் உதவியுடன் பார்வையற்ற மாணவர்களுக்கு

Tnpsc Group – 4 போட்டித்தேர்விற்கான பாடபுத்தகங்களை வாசிப்பாளர்கள் உதவியுடன் பார்வையற்ற மாணவர்களுக்கு புத்தகங்கள் வாசிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

ஆங்கில மொழித்திறன் பயிற்சி (Spoken English) வகுப்பு – June 30, 2019

குழந்தைகள் மற்றும் போட்டித்தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்காக ஆங்கில மொழித்திறன் பயிற்சி (Spoken English) வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சியினை திரு.உதயசுரியன் பயிற்சி வழங்குகிறார்.

சதுரங்கப் பயிற்சி – June 30, 2019

மாவட்ட மைய நூலகத்தில் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சதுரங்கப் பயிற்சி குழந்தைகளுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியினை செஸ் மாஸ்டர் திரு.சங்கரா குழந்தைகளுக்கு பயிற்சி வழங்குகிறார்.

வாசிப்போம் சுவாசிப்போம் – நூல் வெளியீட்டு விழா

மாவட்ட மைய நூலகத்தில் வாசிப்போம் சுவாசிப்போம் எனும் தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.