Tnpsc Group – 4 பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு விண்ணப்பிக்கும் வசதி

Tnpsc Group – 4 போட்டித்தேர்விற்கான ஆன்லைன்-ல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டு விண்ணப்பித்து தரப்பட்டது.

English Language Skill Development Classes- June 23, 2019

ஓவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் குழந்தைகள் மற்றும் போட்டித்தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்காக ஆங்கில மொழித்திறன் பயிற்சி Spoken English) வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சியினை மைய நூலக வாசகர் வட்ட நிர்வாகி திரு.வல்லநாடான் இல.கணேசன் மற்றும் திரு.உதயசுரியன் பயிற்சி வழங்குகிறார்.

Chess Coaching Class

Chess Coaching Class -  சதுரங்கப் பயிற்சி
Chess Coaching Class

மாவட்ட மைய நூலகத்தில் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சதுரங்கப் பயிற்சி குழந்தைகளுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியினை செஸ் மாஸ்டர் திரு.சங்கரா குழந்தைகளுக்கு பயிற்சி வழங்குகிறார்

TNPSC Group – IV தேர்விற்கான பயிற்சி வகுப்புகள்

போட்டித்தேர்வு மாணவர்களுக்காக TNPSC Group – IV தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது . இப்பயிற்சி வகுப்பினை பிரிலியண்ட் கோச்சிங் சென்டர் பயிற்றுநர் திரு.ருபன் பயிற்சி வழங்கினார்.

International Yoga Day 2019

உலக யோகா தினத்தை முன்னிட்டு வாசகர் மற்றும் பொதுமக்களுக்காக யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை ஸ்ரீரங்கம் விவேகானந்தா யோகா மைய இயக்குநர் திரு.ஸ்ரீதர் மற்றும் சந்தானகிருஷ்ணன் மற்றும் யோகா மாஸ்டர் திரு.நன்மாறன் ஆகியோர் கலந்துகொண்டு யோகா பயிற்சிகள் வழங்கினர். வாசகர் வட்டத்தலைவர் கவிஞர். வீ.கோவிந்தசாமி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான வாசகர்கள் கலந்து கொண்டனர்.

Senior Citizen Programe for Seniors – Traditional Music

மூத்தோர் முற்றம் நிகழ்ச்சி மூத்தோர்களுக்காக பிரதி மூன்றாவது புதன்கிழமை நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் “ பாரம்பரிய தமிழ் இசை” எனும் தலைப்பில் இலால்குடி முருகானந்தம் சிறப்புரையாற்றினார். மைய நூலக வாசகர் வட்டத்தலைவர் கவிஞர்.வீ.கோவிந்தசாமிஇ வாசகர் வட்ட நிர்வாகி திரு.நன்மாறன் மற்றும் முதல் நிலை நூலகர் திருமதி.கண்ணம்மாள் கலந்து கொண்டனர்

Mental Well being programme

ஸ்ரீரங்கம் தீர்வு மைய மனநல ஆலோசகர்கள் ராஜராஜேஸ்வரி மற்றும் ஷீலா போட்டித்தேர்விற்கு தயார் செய்யும் போது எவ்வாறு அவர்களது மனநிலை இருக்க வேண்டும் என்பதை பற்றியும், நினைவாற்றலை அதிகரிக்கவும், ஒருமுகப்படுத்தி படித்தல், மன சம்மந்தமான குறைபாடுகள் இருப்பின் அதை நீக்கவும், மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டது

IAS, IPS போன்ற குடிமைப்பணித் தேர்வுகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் IAS, IPS போன்ற குடிமைப்பணித் தேர்வுகளுக்கும் மத்திய – மாநில அரசுப் பணிகளுக்;கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவியர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி 16.06.2019 பிற்பகல் 3.00 மணிக்கு மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய மேனாள் தலைவர் ந.க.ரகுபதி IAS (ஓய்வு) ஆலோசனை வழங்கி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் திரு.அ.பொ.சிவகுமார் வாசகர் வட்டத்தலைவர் கவிஞர்.வீ.கோவிந்தசாமி வாசகர்; வட்ட நிர்வாகி திரு.நன்மாறன் மற்றும் முதல் நிலை நூலகர் திருமதி.கண்ணம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கோடைகால சிறப்பு போட்டி – பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் விழா

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டத்துடன் இணைந்து மே 2019-ம் மாதம் நடத்திய குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்குபெற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் விழா மாவட்ட மைய நூலகத்தில் 16.06.2019 ஞாயிற்றுக்கிழமையன்று முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் திரு.அ.பொ.சிவகுமார் வாசகர் வட்டத்தலைவர் கவிஞர்.வீ.கோவிந்தசாமி மகளிர் வாசகர் வட்டத்தலைவி திருமதி.அல்லிராணி பாலாஜி வாசகர் வட்ட நிர்வாகிகள் திரு.இலகணேசன்இ திரு.நன்மாறன் முதல் நிலை நூலகர் திருமதி.கண்ணம்மாள் நூலகர் திரு.தர்மர் கலந்து கொண்டனர்.