TNCWWB Recruitment 2020 69 Record Clerk Posts

TN Labour Department Jobs 2020- TNCWWB invites Online applications for recruitment of 69 Record Clerk & Driver Posts. This online facility will be available in the Official website https://tncwwb.onlineregistrationform.org/TNCWWB/ from 10.09.2020 to 30.09.2020 5:45 PM.  Interested candidates are requested to peruse the advertisement regarding the process of Examinations and Interview, Eligibility Criteria, Application Fee, How to Apply, Pattern of Examination, Syllabus, Question Paper, Admit Date, Exam Date, Result Date etc,. Refer thoroughly before applying.

TNCWWB Recruitment 2020 69 Record Clerk & Driver Posts:Organization Name: Tamil Nadu Construction Workers Welfare Board
Job Category: Tamilnadu Govt Jobs
Total No of Vacancies: 69
Job Location: Tamilnadu Latest TNCWWB Vacancy Details:Name of the Post & No of Vacancies: ONLINE Applications are invited from the eligible candidates for appointment to the Following Posts:

SI No Name of Post No. of Post
1. Record Clerk 37 Posts
2. Driver 32 Posts
Total 69 Posts

https://tncwwb.onlineregistrationform.org/TNCWWB/

மாவட்ட மைய நூலகத்தில் அகில இந்திய வானொலி நேரடி விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஹலோ எப் எம் சார்பாக 12.03.2020 அன்று அகில இந்திய வானொலி ஹலோ எப் எம் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்;சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போட்டித்தேர்விற்கு தயார் செய்து வரும் மாணவ மாணவியர்கள், வாசகர் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்களிடையே உடல்நலம், ஆரோக்கியம், உடல் நலக்குறைபாடுகள் கேட்டறிந்தும் குழந்தையின்மை பிரச்சனை, நீர்கட்டி, ஒற்றை தலைவலி, தைராய்டு தலையில் ஏற்படும் பொடுகு இவற்றை சரிசெய்ய கூடிய சித்த மருத்துவம் பற்றியும், சித்தா ஆயூர்வேதம் , ஹோமியோபதி யுனானி இம்மருத்துவத்தின் மூலம் “உணவே மருந்து’ என்பது பற்றியும், நோய்கள் குணமாவதற்கான சித்த மருத்துவ வழிமுறைகள் பற்றியும் அரசு பொது மருத்துவமனை சித்த மருத்துவர் டாக்டர் எஸ்.காமராஜ் விளக்கி கூறினார். அகில இந்திய வானொலி இயக்குநர் நடராஜன் அவரது உரையில் போட்டித்தேர்வு மாணவர்கள் தேர்வினை எதிர்கொள்ள வானொலியில் காலை மாலை இரண்டு வேளைகளிலும் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில் நாட்டு நடப்புகள் உலக செய்திகளை கேட்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மாவட்ட மைய நூலகத்தில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலக மகளிர் வாசகர் வட்டம் பெண்கள் யுகா அமைப்பும், திருச்சிராப்பள்ளி ரோட்டரி பீனிக்ஸ் இணைந்து மகளிர் தினத்தன்று மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கான ‘தையல் பயிற்சி’ மாவட்ட மைய நூலகத்தில் காலை 10.00 மணி முதல் 1.00 மணி முடிய நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் ஒரே நாளில் ரவிக்கை வெட்டித்தைக்கும் பயிற்சியினை திருமதி.ராதிகா மகளிர்க்கு பயிற்சி அளித்தார்
பிற்பகல் 2.30 மணிக்கு மகளிர்க்கான “பேச்சுப்போட்டியும், நினைவாற்றல் போட்டியும்” நடைபெற்றது. மகளிர் நலன் முன்னேற்றம் தொடர்பான 28 தலைப்புகள் தயார் செய்யப்பட்டு மகளிர்க்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. நினைவாற்றல் போட்டியில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை சில நிமிடங்கள் காட்சிப்படுத்தி அக்காட்சிப்படுத்திய பொருட்களை மகளிர் நினைவாற்றலுடன் எழுதும்; நினைவாற்றல் போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து “மகளிர் மட்டும்” என்ற தலைப்பில் பொது அறிவு “வினாடி வினா” போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியினை வினாடி வினா வேந்தர் பேராசிரியர். ஜி.பாலகிருஷ்ணன்; நடத்தினார். பயிற்சி மற்றும் போட்டிகளில்; கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

TANGEDCO Recruitment 2020 600 AE Posts

TANGEDCO Recruitment 2020 – TANGEDCO invites Online applications for recruitment of 600 Assistant Engineer (AE) Electrical, Assistant Engineer (AE) Mechanical, Assistant Engineer (AE) Civil Posts. This online facility will be available in the Official website www.tangedco.gov.in from 24.01.2020 to 24.02.2020. Interested candidates are requested to peruse the advertisement regarding the process of Examinations and Interview, Eligibility Criteria, Application Fee, How to Apply, Pattern of Examination, Syllabus, Question Paper, Admit Date, Exam Date, Result Date etc,. Refer thoroughly before applying.

Important Date


Date of opening of Online Portal for submitting applications
24.01.2020
Last date for submission of online applications, for uploading the documents and fr making online payment 24.02.2020
Last date for payment of Fee through Canara Bank / Indian Bank / Indian Overseas Bank (Challan Payment) 27.02.2020

Detailed Notification

http://www.tangedco.gov.in/linkpdf/AE_NOTIFICATION_%20FINAL_PDF.pdf

TANGEDCO Recruitment 2020 1300 Assessor Posts

TANGEDCO Recruitment 2020 – TANGEDCO invites Online applications for recruitment of 1300 Assessor Posts. This online facility will be available in the Official website www.tangedco.gov.in from 10.01.2020 to 10.02.2020. Interested candidates are requested to peruse the advertisement regarding the process of Examinations and Interview, Eligibility Criteria, Application Fee, How to Apply, Pattern of Examination, Syllabus, Question Paper, Admit Date, Exam Date, Result Date etc,. Refer thoroughly before applying.

apply :http://103.61.230.220/rect20/login.php

மாவட்ட மைய நூலகத்தில் பார்வைகுன்றியவர்களுக்காக “தமிழின் சிறந்த நூறு நாவல்கள்” ஒலி புத்தக வெளியீட்டு விழா

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனி பிரிவு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பார்வைகுன்றியவர்களுக்கு கணினி மற்றும் பல்வேறு உபகரணங்கள் மூலம் ஒலி புத்தகங்கள் மின் புத்தகங்கள் பயன்படுத்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் வாசிப்போம் (பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இணைய நூலகம்) மற்றும் ரோட்டரி பீனிக்ஸ் சார்பாக 13.10.2019 அன்று சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு செய்த “தமிழின் சிறந்த நூறு நாவல்கள்” மின்புத்தகமாகவும் ஒலி புத்தகமாகவும் “வாசிப்போம் இணைய நூலகம்” என்ற அமைப்பு உருமாற்றியுள்ளது. மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவகுமார் அவர்கள் ஒலி புத்தக குறுந்தகட்டினை வெளியிட “ஜெகஜ்ஜோதி” பார்வையற்றோருக்கான தன்னார்வள வாசிப்பாளர் வட்டம் நிர்வாகி பிரபா வெங்கட்ராமன் பெற்றுக்கொண்டார். “வாசிப்போம் இணைய நூலகம்” அமைப்பின் நிறுவனர் எஸ்.இரவிகுமார் இந்நிகழ்ச்சியில் விளக்க உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பார்வைகுன்றியவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று பயன் பெற்றனர்.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை” திட்டத்தின் கீழ் திறனறிவுத் தேர்விற்கான பயிற்சி வகுப்பு

“தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை” திட்டத்தின் கீழ் திறனறிவுத் தேர்விற்கான பயிற்சி வகுப்பு 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி முடிய எட்டாம் வகுப்பு அறிவியல்  தொடர்பான பாடத்திட்டங்களுக்கான வகுப்பு நடத்தப்பட்டது.

தேசிய வருவாய் வழி திறனறிவுத் தேர்விற்கான பயிற்சி வகுப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்காக மத்திய அரசு வழங்கும் “தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை” திட்டத்தின் கீழ் திறனறிவுத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.00 மணி முதல் 1.00 மணி முடிய எட்டாம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல், கணிதம் தொடர்பான பாடத்திட்டங்களுக்கான வகுப்புகள், மனத்திறன் தேர்வு மற்றும் படிப்புத்திறன் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று 05.10.2019 நடைபெற்ற பயிற்சி வகுப்பில் skype மூலம் மைய நூலகத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்பினை தொட்டியம் கிளை நூலகத்தில் நூலகத்தை சுற்றியுள்ள எட்டாம் வகுப்பு கல்வி பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் VIDEO CONFERENCING வழியாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இலக்கியச் சந்திப்பு “வாசக சாலை”

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் வாசக சாலை இணைந்து மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இலக்கியச் சந்திப்பு “வாசக சாலை” நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்தொடர்ச்சியாக 08.09.2019 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் எழுத்தாளர் அரசனின் இண்டமுள்ளு சிறுகதை தொகுப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆய்வியல் நிறைஞர் அ.கீதா மற்றும் தனியரசு தமிழாசிரியர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சிக்கு வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.